சிவகங்கை: மாவட்டம் முழுவதும் அதிகபட்சமாக 63.80 மி.மீ. மழை பதிவு பதிவாகியுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் தகவல்
கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மானாமதுரை ,சிவகங்கை, திருப்புவனம், மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. சிங்கம்புனரி பகுதியில் 42 மி.மீ. மழை பதிவும் சிவகங்கை (7.80 மி.மீ.), திருப்பத்தூர் (8.00 மி.மீ.), காரைக்குடி (6.00 மி.மீ.) ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது.