குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை சார்பில் வருடம் தோறும் “வானமே எல்லை” என்ற தலைப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்று வருகின்றனர். இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஏழை, எளிய 30 குழந்தைகளை முதன் முறையாக விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.