திருச்செந்தூர்: தோப்பூர் பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(24). எலக்ட்ரீசியன் ஆன இவர் தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூரை அடுத்த தோப்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.