நாகூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் தனது சுனாமி குடியிருப்பு வீட்டில் தனது மனைவி சுதா, குழந்தைகள் வேலு, கிட்டு ஆகியோர் து£ங்கி கொண்டிருந்தார். டிட்வா புயல் காரணமாக கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரை நேற்று காலை பெயர்ந்து விழுந்தது. இதில் 4 பேரும் காயமடைந்தனர். இவர்கள் சப்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர் குழுவின் சிகிச்சை அளித்து வருகின்றனர்.