நத்தம்: கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவில்பட்டி துரைக்கமலம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் தலைமை தாங்கி 673 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.