மத்திய அரசு, பழைய 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளது தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு மேம்படும் என தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை மூத்த துணை தொழிலாளர் ஆணையர் முனைவர் ஶ்ரீனு தாரா, மதுரை மண்டல தொழிலாளர் ஆணையர் பிரவீன் பாண்டி மோகன்தாஸ் ஆகியோர் கூறியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இச்சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.