திருவள்ளூர்: பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் வெளியேற்றம் 3000 கன அடியாக அதிகரிப்பு
கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் திறப்பு இன்று காலை 2500 கன அடியிலிருந்து 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது, கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள நம்பாக்கம்,கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம்,ஒதப்பை,நெய்வேலி, எறையூர்,வெள்ளியூர், பீமன் தோப்பு கொரக்கந் தண்டலம், சோமதேவன்பட்டு,மெய்யூர், ஆகிய 30 கிராமங்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது