தமிழகம் முழுவதும் திமுக சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் திமுக சார்பாக சமத்துவ பொங்கல் செம்பட்டி சந்தை திடலில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் சமத்துவ பொங்கலை துவக்கி வைத்துவிட்டு பேசுகையில், தமிழகத்தில் தந்தை பெரியார் வழியில் சமத்துவத்தை கொண்டு வந்து பாதுகாத்த தலைவர் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள். சமத்துவபுரங்களை கொண்டு வந்து மனிதருக்குள் சமத்துவத்தை ஏற்படுத்தினார் என்றார்