வேடசந்தூர்: சாலையூர் நால்ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் புதருக்குள் விழுந்து படுகாயம்
கரூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 27. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் கரூரில் இருந்து சுள்ளெரும்பில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். சாலையூர் நால்ரோடு தாண்டியதும் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த முப்புதருக்குள் சென்று விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.