தாம்பரம்: தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி தமிழ் பேரவை நிறைவு விழாவில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பு
தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி தமிழ் பேரவை நிறைவு விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சிறப்பு விருத்தினாரக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "மாணவர்கள் படிப்பைத் தாண்டி எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க நேரம் ஒதுக்கவேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்" என்று பேசினார்.