கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கப்பா, விவசாயியான இவர் தனது நிலத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் ராகி பயரிட்டுள்ளார் தினமும் ராகி பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்த நிலையில் நேற்று இரவு சிவலிங்கப்பா ராகிப் பயிர்களுக்கு இரவு காவலுக்கு சென்றுள்ளார்.. அப்போது காட்டு பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்த சிவலிங்கப்பா ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது