மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த வெற்றி விநாயகர், பொன்னம்மா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாக சாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து