உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 402 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் ராஜேந்திரன், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜான்சன் எடின்பர்க் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.