கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராகவேந்திரகுமார் (55). இவர் தனது டிவிஎஸ் XL வாகனத்தில் சிந்தலவாடி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது omni கார் மோதியதில் ராகவேந்திர குமார் படுகாயம் அடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.