குரும்பபட்டியைச் சேர்ந்தவர் முருகன் (55). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் மது போதையில் அரளி விதை சாப்பிட்டுள்ளார். இதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அவரின் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இது குறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.