வேடசந்தூர்: மகளிர் மேல்நிலைபள்ளியில் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு
வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு செய்தார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து தேர்தல் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் தாசில்தார் மணிமொழி, பேரூராட்சி செயல் அலுவலர் மரிய அந்தோணி யுஜின், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வேடசந்தூர் திமுக பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் காட்டுபாவா சேட், திமுக 15 வது வார்டு செயலாளர் செய்யது அபுதாஹிர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.