தூத்துக்குடி மீளவிட்டானில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் புதியதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது இதனை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். பின்னர் அவர் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பேசும்போது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும் என்றார் அப்போது குழந்தைகளுக்கு கையில் சாக்லேட் வழங்கப்பட்டது சாக்லேட் பேப்பருடன் வழங்கக்கூடாது ஏனென்றால் குழந்தைகள் தொண்டையில் பேப்பர் சிக்கிக் கொள்ளும் என அமைச்சர் கீதா ஜீவன் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.