அரூர்: அரூர் பகுதியை சேர்ந்த மகா என்ற பெண்ணை அவருடைய கணவனே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் பூந்தி மஹால் தெருவை சேர்ந்த பூங்கொடி என்பவருடைய மகள் மகா. இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு நித்திஷ் மற்றும் சாய் ஸ்ரீ ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மகா அவருடைய தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்து