தூத்துக்குடியில் இன்று பாண்டியாபதி 16வது மன்னரான பாரதவர்ம பாண்டியன் என்று அழைக்கப்படும் தேர் மாறனின் 273 வது ஜெயந்தி விழா அவரது கல்லறை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குறிப்பாக பல்வேறு கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரதவர்ம பாண்டியனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.