தூத்துக்குடி: தொழிலாளர் சட்ட தொகுப்புகளை எதிர்த்து டிச.12, 13, 14 ஆகிய 3 நாட்கள் சிபிஐ(எம்) லிபரேஷன் மாநாடு தமிழ்ச்சாலை ரோட்டில் தலைமை குழு உறுப்பினர் சங்கர் பேட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் கட்சி சார்பில் தூத்துக்குடியில் மாநாடு நடைபெறுகிறது. இந்த 12வது மாநில மாநாடானது வரும் 12, 13, 14 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கட்சியை வழிநடத்தும் புதிய மாநில கமிட்டியையும், புதிய மாநில செயலாளரையும் தேர்ந்தெடுக்க உள்ளது.