தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கடலோர காவல் படை ஆய்வாளர் பேச்சிமுத்துவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடலோர காவல் படை போலீசார் திரேஸ்புரம் கடற்கரையில் சோதனை செய்தனர். அப்போது அங்கே படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 81 பண்டல்களில் இருந்த 2835 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர் இந்த கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய கடத்தல் கும்பலை கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்,