ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் இராஜேந்திரன் தலைமை வகித்தார்.