தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் நேற்று இரவு திடீரென வடக்கு மற்றும் தெற்கு பகுதி சுவர்கள் அருகே சுமார் 6 அடி அளவு பள்ளம் ஏற்பட்டு கிரானைட் கற்கள் உடைந்து தெப்பக்குளம் சுவர்களும் கீழே விழும் நிலை ஏற்பட்டது மேலும் அந்த பகுதியில் இருந்த இரண்டு மின்மாற்றிகளும் கீழே விழும் அபாயம் உருவானது இதைத்தொடர்ந்து இன்று காலை அந்த பகுதிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.