தூத்துக்குடி பனிமய மாதா கோவில் அருகில் சமூக ஆர்வலர் காளியம்மாள் செய்தியாளர்களை இன்று மதியம் 2 மணி அளவில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காளியம்மாள் அரசியலுக்கு வந்தது அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்று வரவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காகத்தான் அரசியல் தளத்திற்கு வந்தேன். அது தேர்தலால் அரசியலால் மட்டும் தான் செய்து முடிக்க முடியும் என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டேன்.