Download Now Banner

This browser does not support the video element.

காரைக்குடி: காரைக்குடி அண்ணாநகர் ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் சரியாக வழங்காததை கண்டித்து விற்பனையாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

Karaikkudi, Sivaganga | Aug 25, 2025
காரைக்குடி அண்ணாநகர் 7வது வார்டில் செயல்படும் ரேஷன் கடையில்,1500 ரேஷன் கார்டுகள் உள்ளன.அனைத்து கார்டுகளுக்கும் ஒரே கடையில் பொருட்கள் வழங்கப்படுவதால்,முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை.மாதத்தில் 2-3 நாட்கள் மட்டுமே விற்பனையாளர் வருவதாகவும், சரியான நேரத்தில் கடை திறக்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இன்று காலை 11மணிக்கு வந்த விற்பனையாளர் பாயின்ட் ஆப் சேல் கருவி பழுது என கூறியதால் பொதுமக்கள் விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us