ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட தனுஷ் மற்றும் வசந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமாலின் பரிந்துரையின் பேரில் இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.