பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர், இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் வருவாய் துறை சார்ந்த அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடியது, இதனால் வருவாய் துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டது,