தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான கும்பக்கரை அருவியில் கொடைக்கானல் பகுதியில் தொடர் மழை காரணமாக திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்தனர். மேலும் நீர்வரத்து சீரான பின் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.