தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கு கல்மேடு தெற்கு கல்மேடு இடையில் 8 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஆற்றுப்பாலம் அமைக்கும் பணி துவங்கியது இந்த பணியை சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி வி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.