சிங்கம்புணரி துணை மின் நிலையத்தின் 11KV கண்ணமங்கலபட்டி பீடரில் செப்டம்பர் 09, 2025 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மரம், மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறும். இதனால், கண்ணமங்கலபட்டி, காப்பாரப்பட்டி, நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் எஃப் கென்னடி கேட்டுக்கொண்டார்.