உ.செல்லூரைச் சேர்ந்த மீனாட்சி, தனது 7 மாத கைக்குழந்தை குணாவுடன் விழுப்புரத்திலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார். நேற்றிரவு செங்குறிச்சி சுங்கச்சாவடியில் குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.