இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் இன்று ஐந்தாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.