தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நாசரேத் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீசார் இன்று நாசரேத் வெள்ளமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் சாத்தான்குளம் தெர்க்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பச்சைமால் (27) என்பதும் அவர் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்தது.