பாபநாசம்: கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்... கொள்முதல் செய்வதில் தாமதம் ஆனதால் மழையில் நனைந்த அவலம்: கண்ணீருடன் தவிக்கும் விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவியல் குவியலாக கொட்டப்பட்டு உள்ள நெல் மணிகள் நேற்று இரவு பெய்த கனமழையால் நனைந்து விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் இந்த அவலம் நடந்துள்ளது.