ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா பகுதியில் உள்ள M.N திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து முகாமில் உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . இந்த நிகழ்வில் ஆற்காடு வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்