திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் துர்கா. இவரது கணவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் துர்கா வேலைக்குச் சென்று அவரது ஒரே மகள் சரோன் ஜாய்ஸியை பார்த்து வருகிறார். சரோன் ஜான்சி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். தந்தை இறந்த துக்கம் தாங்காமல் நேற்று சரோன் ஜான்சி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.