திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர் ரோஜா தெரு பகுதியில் இன்று காலை சாலையில் நடந்த சென்ற ஆறு வயது சிறுவன் நிஷாந்தை தெரு நாய் துரத்தி அவரது கால்,கைகளில் கடித்துள்ளது, இதனால் அவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தெரு நாயிடமிருந்து சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்,அவருக்கு அங்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்,