வடமதுரையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு சொந்தமான பால் கம்பெனி 2003 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளரான மேட்டுப்பட்டி முத்துரத்தினவேல், நிலக்கோட்டை சங்கால்பட்டி வழக்கறிஞர் முனிச்செல்வம், உள்ளிட்ட 10 பேர் கம்பெனிக்கு சென்று கட்சி பொதுக்கூட்டம் நடத்த ரூ.5 லட்சம் நன்கொடை தர வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊழியர்கள் கம்பெனியின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் தரவே, உயரதிகாரிகள் அறிவுரைபடி மேலாளர் ரஞ்சித்யாதவ் வடமதுரை போலீசில் புகார் தந்தார்.