Download Now Banner

This browser does not support the video element.

பொன்னேரி: ஆள்மாறாட்டம் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்து ₹1.10 கோடி மோசடி வழக்கில் செங்குன்றத்தில் 2 பேர் கைது

Ponneri, Thiruvallur | Aug 21, 2025
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்த ரசாயன வியாபாரியான ஹேமந்த்குமார் ஜெயின் (59) என்பவர் விளாங்காடுபாக்கம் பகுதியில் உள்ள 67.5 சென்ட் நிலத்தை 1.1 கோடி ரூபாய் பணம் செலுத்தி கடந்த 2022ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்துள்ளார்.ஆள் மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு நடந்திருப்பதை கண்டறிந்த அவர் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அவர் புகாரின் அடிப்படையில் மோசடி செய்த நெல்லையை சேர்ந்த இளையராஜா 49, திருமுல்லைவாயல் சேர்ந்த ஆனந்தகுமார் 35 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us