கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு முக்குலத்தோர் அமைப்புசாரா அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் முறையாக வழங்க வேண்டும் எனக் கூறி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர் மனுவை பெற்றுக்கொண்ட அவர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.