திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 69. இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலெக்டர் சிறப்பு முகாமில் மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார் பிறகு அவரை அருகில் இருந்தவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.