தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் எரியோடு, மத்தனம்பட்டியை சேர்ந்த ராஜகோபால் மகன் சிவகுமார் என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவக்குமார் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இதுதொடர்பாக தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டு சிவகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்