காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு பகுதியில் கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டாம்ப் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் சமூக பொறுப்புனர்வு திட்டத்தின் கீழ், குழந்தைகள் நம்பிக்கை அறக்கட்டளையுடன் இணைந்து, வெங்காடு கிராமத்தில் உள்ள வெங்கட்ராம ஐயர் குடிநீர் குளம் சீரமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, குளம் சீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.