இளையான்குடி அருகே எஸ் காரைக்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இப்பள்ளியில் . இன்று ஆறாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமையாசிரியர் பிரிட்டோ ஒரு மாணவியின் சீறுடையை கிழித்து பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது . இதனை பாதிக்கப்பட்ட மாணவி அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று அழுது கொண்டே சென்று பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.