ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசின் மருத்துவ பெட்டகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்