சாணார்பட்டி அருகே பூவன் கிழவன் பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி இவரது உறவினர் வையம்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரி இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூர்பாலையிலல் பணியாற்றி வருகின்றனர். இருவரும் பூவன் கிழவன் பட்டியில் தங்கி விட்டு இரு சக்கர வாகனத்திற்கு கோபால்பட்டி அருகே பெட்ரோல் நிரப்ப சாலை கடக்க முயன்ற போது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்