சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. கடந்த ஒரு மாதமாக வெப்பம் வாட்டிய நிலையில், இரண்டு நாட்களாக மழையின்றி ஏமாற்றம் அளித்தது. இன்று மாலை 5:30 மணியளவில் திடீரென பெய்த கனமழையால் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், பிள்ளையார்பட்டி பகுதிகளில் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.