ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களை உடல் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர் முகாமில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.