சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழிகாட்டுதலுடன், பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து தலைமையில், 8 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். 13 துறை அதிகாரிகள் மூலம் 586 மனுக்கள் பெறப்பட்டு, 76 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்த முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்