நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாடல்பெற்ற வைணவ, சைவ தலங்கள் நிறைய உள்ளது. இதில் நாகப்பட்டினம் சௌந்திரராஜபெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் 19வது திவ்யதேசமாகும். திருமங்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலம் ஆகும். இந்த கோயிலில் மட்டும் தான் நின்ற, அமர்ந்த, கிடந்த கோலங்களில் பெருமாளை தரிசனம் செய்ய முடியும். நான்கு யுகங்களிலும் வழிப்பட்ட தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலம்.